பெண்களும் சமையலறையும்

செவ்வாய், டிசம்பர் 16, 2008 | 0 Comments

பெண்கள் வாழ்வில் சமையலறை பெரும் இடம் - ஆர்.சூடாமணி, அம்பை, திலகவதி, வாஸந்தி, தமயந்தி ஆகிய பெண் எழுத்தாளர்களால் சிறுகதைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இதில் அம்பையின் ‘வெளிப்பாடு’, ‘ஒரு வீட்டின் மூலையில் சமையலறை’ ஆகிய சிறுகதைகள் ‘சமையலறை’ என்னும் தளத்தையே அடிப்படையாகக் கொண்டு கதைகள் அமைந்துள்ளது. ‘வெளிப்பாடு’ - சிறுகதைகளில் பெண்கள் பற்றிய ஆராய்ச்சிக்காகச் செய்திகள் சேகரிக்கும் அறிவு ஜீவிப்பெண், தாமிரபரணிக் கரையிலுள்ள சிற்றூரில் வசிக்கும் ஐம்பது வயதுப் பெண் - இருபது வயதுப் பெண் (திருமணத்திற்கு முன், பின்) ஆகிய இருநிலைகளிலும் உள்ள பெண்களை சந்திக்கும்போது கிடைக்கும் அனுபவமே பதிவு செய்யப்பட்டுள்ளது. புள்ளை பெறுதல், ஆக்கிப் போடுதல் என்பதையே கடமையாகக் கொண்டு செயல்படும் பெண்களையே இக்கதை படம் பிடித்துக்காட்டியுள்ளது.

About