பதிவுகள் ப்ளாக்ல போடலாம்ங்கிற உத்வேகத்தைக் கொடுத்தது பரிசல்காரன் ப்ளாக தான். அப்ப அது பத்தி நிறைய விஷயங்களில்‍ டெம்ப்லேட், அது இதுலலாம் உதவியது விஜயலக்ஷ்மண்.சரி. பிள்ளையார் சுழி போட்டாச்சு.ப்ளாக்ல என்னலாம் எழுதலாம்னோன ராஜவேல் மொக்கையா எழுதுக்கானான். அப்பதான் நிறைய பேர் வாசிப்பாங்கனான். வழக்கமான உயிரில் விழுந்த சிக்கல் அது இதுனுலாம் எழுதிடாதனு அவன் மறைமுகமா எச்சரிசசது புரிஞ்சா கூட பிறவி புத்தி போகுமா ?

கடைசிப் ப்க்கம் தொலைந்த டைரினு ஒரு ப்க்கம் எழுதிட்டு போகலாம்னு மனசத் தேத்திக்கிட்டேன்.வ்ழக்கமா பேசுறப்ப கொஞ்சம் வெளிப்படுற குசும்ப வச்சி மத்தத சமாளிச்சிக்கலாம்னு ஒரு கிராப் மனசுக்குள்ள வரைஞ்சாச்சு.

அப்புற‌மா த‌மிழ்ம‌ன‌ம்ல‌ எப்ப‌டி சேர்க்க‌னு ப‌ரிச‌ல்கார‌ன் கிருஷ்ணா உத‌வி செய்தார். த‌மிழ்வெளில‌ ம‌றுப‌டி நில‌வ‌ன் சேர்த்து விட்டார்.ந‌ண்ப‌ர்க‌ள் உடையான் ப‌டைக்கு அஞ்சான்.

க‌டைசில‌ கிருஷ்ணா போன்ல‌ சொல்ல‌ சொல்ல‌ த‌மிழ் ம‌ன‌ம் க‌ருவிப்ப‌ட்டைல‌ ‌‍பேர் ந‌ல்லாருக்கு இல்லையா?சேர்த்தாச்சு.
இப்ப‌ பாருங்க‌ . த‌மிழ் ம‌ன‌ம் பேஜ்ல‌ உங்க‌ ப‌திவு வ‌ரும். முத‌ல் 20க்குள்ள‌ முத‌ல் ப‌க்க‌த்துல‌ தெரியும். அப்புற‌மா சைடுல‌ ம‌றுமொழி தெரியும்னார். ச‌ரினு சொல்லிட்டு ராத்திரி ஒரு ப‌த்து ம‌ணிக்கு யாராச்சும்
யாராச்சும் பின்னோட்டம் போட்டிருக்காங்களானு பார்த்தேன் .குச் நஹி. சரினு ஒரு ரெண்டு மணிக்கு முழிப்பு வந்தப்போ சிஸ்டம் ஆன் பண்ணி பார்த்தேன். புள்ள உச்சா போயிட்டானு பார்க்குற மாதிரி.
அப்பவும் எதுமில்லை.

காலைலயும் பார்த்தாச்சு. இல்லை.இல்லவே இல்ல. பரிசல்காரன்ட்ட மெசேஜ் பண்ணி ‍ஒண்ணுமே வரலனேன். அழக்கூடாதுனு சொன்னார் வடிவேலு பாணில. அட‍= அழுது அழுது எங்க வீட்டு போர்வை நனைஞ்சிப் போச்சேனு சொன்னேன்.

அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா சாமினேன்.
நீங்க எல்லாத்தையும் லைட்டா எடுத்துக்கிறீங்க. நல்ல ஸ்பிரிட்னார்.
அடிங்க. மூஞ்சில மட்டும் அடிக்காதீங்க. பர்சனாலிட்டி போயிறும்னு தான் சொல்லவும் வேண்டியிருக்கு.
இந்த பதிவுக்கு பெரும்பாலும் உதவிய வடிவேலுக்கு மானசீகமான நன்றி.
வடிவேல் சத்தியமா மறுமொழி போட மாட்டார்

About